Monday, March 22, 2010

Monday, March 15, 2010

என் கவிதை

என் கவிதை
நான் மறந்து
ரசிக்க வேண்டும்
பிறருடையதாய்.

நான் சமைத்த
ரசத்தையும், பொறியலையும்
அடுத்தவராய்
நானே ருசிக்க வேண்டும்.

எனைக் காணா இன்னொருவன்
வரைய வேண்டும்
என் படத்தை .

கேட்கவேண்டும்
எனது எண்ணம்
அடுத்தவர் வாய்ச் சொல்லாக.