Monday, March 15, 2010

என் கவிதை

என் கவிதை
நான் மறந்து
ரசிக்க வேண்டும்
பிறருடையதாய்.

நான் சமைத்த
ரசத்தையும், பொறியலையும்
அடுத்தவராய்
நானே ருசிக்க வேண்டும்.

எனைக் காணா இன்னொருவன்
வரைய வேண்டும்
என் படத்தை .

கேட்கவேண்டும்
எனது எண்ணம்
அடுத்தவர் வாய்ச் சொல்லாக.

No comments:

Post a Comment