இதழ்-முத்தம்
பூக்கும் உன்நினைவு மொட்டுக்கள்
முத்தமெனும் நீரை எதிர்ப்பார்த்தப்படி
இதழ் குவித்து 'அப்புறம்' என்று நீ
சொல்லும் ஒற்றை சொல்லில்
ஒட்டிக்கொள்கிறது
உன் இதழுடன் என் நெஞ்சமும்
சுட்டெரித்த உன் ஒற்றை பார்வையில்
கரிந்து கரைந்து ஓடிய என் நாணம் இதழில்
புன்னகையாய் தவழும் சம்மதத்தின்
மொழியினை பேசியவாறு
புரியவில்லை அன்பே.......
நாம் முத்தமிடுகையில் காதலர்கள்
நாமா இல்லை நம் இதழ்களா என்று
அறியாமல் நீ கொடுக்கும் உன்
ஒற்றை முத்ததிற்க்காக ஏங்கும்
அன்பே.......
No comments:
Post a Comment